/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வன நிலம் ஆக்கிரமிப்பு முக்கிய பிரமுகர்கள் பட்டியல் தயார்!வன நிலம் ஆக்கிரமிப்பு முக்கிய பிரமுகர்கள் பட்டியல் தயார்!
வன நிலம் ஆக்கிரமிப்பு முக்கிய பிரமுகர்கள் பட்டியல் தயார்!
வன நிலம் ஆக்கிரமிப்பு முக்கிய பிரமுகர்கள் பட்டியல் தயார்!
வன நிலம் ஆக்கிரமிப்பு முக்கிய பிரமுகர்கள் பட்டியல் தயார்!
ADDED : ஜூலை 26, 2011 01:40 AM
ஈரோடு: மாநிலம் முழுவதும் நிலங்களை அபகரித்தவர்கள் மீது, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது, வன நிலங்களை ஆக்கிரமித்த முக்கிய பிரமுகர்களின், பட்டியல் தயாராகி வருவதாக, வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில், அ.தி.மு.க. ஆட்சியமைத்த நாள் முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தி.மு.க., ஆட்சியின் போது, பொதுமக்களிடமிருந்த நிலங்களை, தி.மு.க., பிரமுகர்கள் அபகரித்ததாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு புகார்கள் வந்ததால், மாநிலம் முழுவதும் நில மீட்பு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில், முன்னாள், தி.மு.க., அமைச்சர்கள் மீதும், எம்.எல்.ஏ.,க்கள் மீதும், புகார்கள் குவிகின்றன. பல்வேறு மாவட்டங்களில் முக்கிய பிரமுகர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த நடவடிக்கையாக, தி.மு.க., ஆட்சியின் போது, அரசியல் பிரமுகர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட, வன நிலங்கள் குறித்தும், அவர்கள் செய்த ஊழல்கள் குறித்தும், வனத்துறை மூலம் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வன நில அபகரிப்பு வழக்குகள் தொடரப்படுமோ என்ற பீதியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், பிரமுகர்களும் உள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆட்சியின் போது, தமிழகத்தில் வனப்பரப்பு, 17.70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது, முற்றிலும் பொய்யான தகவல். கோவை மாவட்டத்தில் 2005ல், 25 சதவீதமாக இருந்த வனப்பகுதி, 2010ல், 22 சதவீதமாக றைந்து விட்டது.
ராமநாதபுரத்தில், 6.45 சதவீதமாக இருந்த வனப்பகுதி, 2 சதவீதமாகவும், வேலூரில், 31ல் இருந்து, 28 சதவீதமாகவும், தேனியில், 39ல் இருந்து, 36 சதவீதமாகவும், கடலூரில், 13ல் இருந்து, 11 சதவீதமாகவும் வனப்பகுதி குறைந்துள்ளது.
கடந்த ஆட்சியில், தி.மு.க., பிரமுகர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பரப்புகளை மீட்டால்தான், தமிழகத்தில் வனப்பரப்பின் சதவீதம் உயரும். தற்போது, மாநிலம் முழுவதும் வன நிலங்களை சுருட்டிய பிரமுகர்களின் பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் வன நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வன நிலங்கள் மீட்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


