ADDED : ஆக 19, 2011 10:23 PM
நத்தம்:நத்தத்தில் மின்வாரிய ஊழியர் போல நடித்து, 16 பவுன் நகை திருடியவரை
போலீசார் தேடி வருகின்றனர்.நத்தம் பஜார் தெருவை சேர்ந்தவர் திருமலை,71,
வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மின்வாரியத்தில் இருந்து வருவதாக கூறிய
ஒரு வாலிபர், ''உங்கள் வீட்டு மீட்டரில் 'ஷாக்' அடிக்கிறது,'' என்றார்.
முதியவர் வீட்டை திறந்தபோது, உள்ளே புகுந்து 16 பவுன் நகையை திருடி
சென்றார். இதன் மதிப்பு இரண்டரை லட்ச ரூபாய். நத்தம் போலீசார்
விசாரிக்கின்றனர்.