/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
தர்மபுரி : பென்னாகரம் பட்டு வளர்ச்சி துறை சார்பில் மாரண்டஹள்ளி தொழில் நுட்ப சேவை மையத்தின் சார்பில் பட்டு வளர்ச்சி துறை கிரியா ஊக்கித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் அ.மல்லாபுரம் கிராமத்தில் நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் ஆக., 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தர்மபுரி
வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ஆடி பெருக்கையொட்டி தர்மபுரி மாவட்ட அரசு மற்றம் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ஆடி பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அரசு அலுவலகங்கள், (வங்கி, கருவூலங்களை தவிர) அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக வரும் 20ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும். ஒகேனக்கல் காவிரியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் ஆடி விழா துவக்க விழா வரும் 1ம் தேதி ஒகேனக்கல்லில் கண்காட்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைக்கிறார். சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


