Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு பஸ் டிரைவர் மீது தாக்கு புவனகிரியில் இருவர் கைது

அரசு பஸ் டிரைவர் மீது தாக்கு புவனகிரியில் இருவர் கைது

அரசு பஸ் டிரைவர் மீது தாக்கு புவனகிரியில் இருவர் கைது

அரசு பஸ் டிரைவர் மீது தாக்கு புவனகிரியில் இருவர் கைது

ADDED : செப் 04, 2011 11:13 PM


Google News

புவனகிரி : புவனகிரியில் அரசு பஸ் டிரைவரைத் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35; அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்தில் இருந்து நெய்வேலிக்கு பஸ்சை ஓட்டி சென்றார். புவனகிரி வெள்ளாற்று பாலத்தில் சென்றபோது மோட்டார் பைக் மீது பஸ் மோதியதால் தகராறு ஏற்பட்டது. மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேர், டிரைவர் வெங்கடேசனைத் தாக்கினர். டிரைவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அந்த வழியாகச் சென்ற அரசு பஸ்களை சாலையில் நிறுத்தினர். தகவலறிந்த புவனகிரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை அரசு பஸ் டிரைவரைத் தாக்கிய தம்பிக்கு நல்லாண்பட்டினத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் கோவிந்தசாமி, 21, ரவிச்சந்திரன் மகன் சந்தோஷ், 20 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us