ADDED : ஜூலை 20, 2011 09:10 PM
தேவகோட்டை:தேவகோட்டையில் அண்ணாமலையார் கல்வி, சேவை அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோம.நாராயணன் செட்டியார் தலைமை வகித்தார்.
அறக்கட்டளை பொருளாளர் நடராஜன் வரவேற்றார். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் கல்வி உதவி தொகை வழங்கினார். கண்டதேவி சந்திரசேகர குருக்கள் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.