/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் டைம் இன்ஸ்டிடியூட் சார்பில் முப்பெரும் கல்வி விழா கோலாகலம்நாமக்கல் டைம் இன்ஸ்டிடியூட் சார்பில் முப்பெரும் கல்வி விழா கோலாகலம்
நாமக்கல் டைம் இன்ஸ்டிடியூட் சார்பில் முப்பெரும் கல்வி விழா கோலாகலம்
நாமக்கல் டைம் இன்ஸ்டிடியூட் சார்பில் முப்பெரும் கல்வி விழா கோலாகலம்
நாமக்கல் டைம் இன்ஸ்டிடியூட் சார்பில் முப்பெரும் கல்வி விழா கோலாகலம்
நாமக்கல்: டைம் இன்ஸ்டிடியூட் சார்பில், முப்பெரும் கல்வி விழா, நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில், இன்று (ஆக., 21) நடக்கிறது.
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, டி.டி.எஸ்.இ., ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பள்ளி மாணவ, மாணவியருக்கு, நாமக்கல் டைம் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பயிற்சி தேர்வு முடிவுகள் மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. டைம் நிறுவனம், இந்தியா முழுவதும், 205 கிளைகளுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பான முறையில், ஏழு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புகளுக்கு (ஐ.ஐ.டி., பவுண்டேசன்) அடிப்படை பயிற்சி வகுப்புகள், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவிலான போட்டித்தேர்வுக்கு (என்.டி.எஸ்.இ.,) பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்கான ஒரு ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு மாலை நேர சிறப்பு பயிற்சிகள் (ஏ.ஐ.இ.இ.இ., அம்ரிதா, வி.ஐ.டி., பிட்ஷாட், எஸ்.ஆர்.எம்., ஏ.ஐ.பி.எம்.பி.,) நடக்கிறது. ''இந்தியா முழுவதும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் மாணவ, மாணவியர் இப்பயிற்சி மூலம் பயன்பெறுகின்றனர். இந்த அரிய வாய்ப்பை, நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என, மைய இயக்குனர் வெங்கட்குமார் கேட்டுக்கொண்டார்.


