Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆங்கில இலக்கிய மன்றம் ராசமா பள்ளியில் துவக்கம்

ஆங்கில இலக்கிய மன்றம் ராசமா பள்ளியில் துவக்கம்

ஆங்கில இலக்கிய மன்றம் ராசமா பள்ளியில் துவக்கம்

ஆங்கில இலக்கிய மன்றம் ராசமா பள்ளியில் துவக்கம்

ADDED : ஜூலை 31, 2011 01:03 AM


Google News

கரூர்: கரூர் வேட்டமங்கலம் ராசமா மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி சார்பில் 2011-12ம் ஆண்டுக்கான ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.பள்ளி முதல்வர் ராணிடயானா தலைமை வகித்தார்.

ஆங்கில இலக்கிய ஆர்வலர்கள் ரவிக்குமார், செந்தில்குமார், கிறிஸ்டிகோல்டா செல்வி ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக பங்கேற்று ஆங்கில இலக்கியம், அதன் சிறப்பகள் பற்றியும் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும வகையில் பேசினர்.விழாவில், மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. விழாவில் அறிவியல் திறனாய்வாளர் இருவருக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு 5,000 ரூபாய்க்கான காசோலைகளை மேல்நிலைப்பள்ளி மாணவன் கார்த்திகேயன் மற்றும் மாணவி பவாதாரிணி ஆகியோர் பெற்றனர்.விழாவில் பள்ளி தாளாளர் வடிவேல், செயலாளர் ஈஸ்வரி, நிர்வாக அலுவலர் கிருபா, ஆலோசகர் தியாகராஜன், கல்வியியல் கல்லூரி துணை முதல்வர் சந்திரசேகரன், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us