கடலூர் : பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் வரும் 24ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திரக் கூட்டம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிக்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் மாதாந்திரக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் வரும் 24ம் தேதி நடக்கிறது.
எரிவாயு நுகர்வோர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளைகள் பெறுவது தொடர்பாக தங்களது குறைகள் குறித்த புகார்களைத் தெரி விக்கலாம்.