ஊகங்களுக்கு பிரசண்டா முற்றுப் புள்ளி
ஊகங்களுக்கு பிரசண்டா முற்றுப் புள்ளி
ஊகங்களுக்கு பிரசண்டா முற்றுப் புள்ளி

காத்மாண்டு : நேபாள மாவோயிஸ்ட் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசண்டா, இரு நாட்களாக காணாமல் போனதாக உலா வந்த பல்வேறு ஊகங்களுக்கு, அவரே முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள விராட்நகர் விமான நிலையத்தில் கடந்த 9ம் தேதி பிரசண்டா, தனது மனைவி சீதா மற்றும் மகன் பிரகாஷ் ஆகியோருடன் விமானம் ஒன்றில் ஏறிச் சென்றார்.இதையடுத்து 9, 10 தேதிகளில் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
அப்போது பேட்டியளித்த அவர் கூறியதாவது:பிரதமர் பாபுராம் பட்டாராய், பாதுகாப்பு அதிகாரிகள், கட்சி மூத்த தலைவர்கள் ஆகியோருக்கு நான் எங்கு சென்றேன் என்பது தெரியும்.நான் நேபாளத்தில் தான் இருந்தேன். அது ரகசிய பயணம் அல்ல. குடும்ப விஷயமாகத் தான் சென்றேன். நான் சென்ற காரியம் வெற்றிகரமாக முடிந்தது.இவ்வாறு தன்னைப் பற்றி உலா வந்த பல்வேறு ஊகங்களுக்கு, பிரசண்டாவே முற்றுப் புள்ளி வைத்தார்.