உ.பி.,மாநிலத்தில் பா.ஜ., ரத யாத்திரை
உ.பி.,மாநிலத்தில் பா.ஜ., ரத யாத்திரை
உ.பி.,மாநிலத்தில் பா.ஜ., ரத யாத்திரை
ADDED : அக் 10, 2011 05:44 AM
புதுடில்லி: அடுத்த ஆண்டு உ.பி., மாநிலத்தில் நடைபெற உள்ள பொது தேர்தலில் பா.ஜ., சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் விவகாரம் இடம் பெறும் என பா.ஜ.,துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: மாநிலத்தில் நடைபெற்று வரும் மாயாவதியின் ஆட்சியின்
ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக ஜன் சுவபிமான் ரத யாத்ரா வரும் 13-ம் தேதி துவக்கப்படும். வாரனாசி மற்றும் மதுரா ஆகிய இரண்டு நகரங்களில் இந்த ரத யாத்திரை நடத்தப்படும் . மதுராவில் துவக்கப்படும் யாத்திரைக்கு கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங் தலைமை வகிக்கிறார். வாரனாசியில் துவங்கும் யாத்திரைக்கு மூத்த தலைவர் கல்ராஜ்மிஸ்ரா தலைமை வகி்க்கிறார். இரண்டு ரத யாத்திரைகளும் நவம்பர் 16-ம் தேதி அயோத்தி நகரில் நிறைவு பெறும். நவம்பர் 17-ம் தேதி ரதயாத்திரை வெற்றி தின கொண்டாட்டம் நடத்தப்படும் என கூறினார்.


