Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தூய்மை சென்னை மாணவர்கள் பேரணி

தூய்மை சென்னை மாணவர்கள் பேரணி

தூய்மை சென்னை மாணவர்கள் பேரணி

தூய்மை சென்னை மாணவர்கள் பேரணி

ADDED : ஆக 21, 2011 02:13 AM


Google News
சென்னை : சென்னை மாநகர் தூய்மை பணியை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேஉள்ள வால்டாக்ஸ் சாலையில், பேரணியை சபாநாயகர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

அ.தி.மு.க., துறைமுகக் கிளை மற்றும் அரிமா சங்கம் ஆகியன இணைந்து பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. அ.தி.மு.க., துறைமுகக் கிளை செயலர் பிரதாப்குமார் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான சென்னை ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பேரணியில் கலந்து கொண்டனர்.சென்னை மாநகரை 90 நாட்களில் தூய்மைப்படுத்துவோம் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us