ADDED : செப் 04, 2011 11:21 PM
சங்கராபுரம் : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடு நடந்தது.
சங்கராபுரம் டி.எம்., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ராமசாமி தலைமை தாங்கினார். ஜாகீர் உசேன் வரவேற்றார். மாவட்ட தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் சிவ லிங்கம், பொருளாளர் வேலாயுதம், கபீர்தாஸ், ஆசிரியர்கள் சம்சுதீன், தங்கராசு, குணசேகரன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் கண்ணன், சசிகுமார் வாழ்த்துரை வழங்கினர். சங்கராபுரம் வட்ட புதிய தலைவர் ராமசாமி, துணை தலைவர் தங்கராசு, செயலாளர் ஜாகீர்உசேன், துணை செயலாளர் சின்னப்பன், பொருளாளர் இளங்கோவன், சட்ட ஆலோசகர்கள் பாண்டுரங்கன், தனசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.