/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணி உடன் துவங்க தே.மு.தி.க., வலியுறுத்தல்அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணி உடன் துவங்க தே.மு.தி.க., வலியுறுத்தல்
அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணி உடன் துவங்க தே.மு.தி.க., வலியுறுத்தல்
அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணி உடன் துவங்க தே.மு.தி.க., வலியுறுத்தல்
அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணி உடன் துவங்க தே.மு.தி.க., வலியுறுத்தல்
ADDED : ஆக 08, 2011 02:37 AM
பெரம்பலூர்: 'அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும், என தே.மு.தி.க., வேப்பூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேப்பூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் குன்னம் இம்மானுவேல் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேப்பூர் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். கேப்டன் மன்ற செயலாளர் தவசி அன்பழகன், மாவட்ட பொருளாளர் சீனிவெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் கங்காதரன், சிவக்குமார், மாவட்ட அவைதலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் துரை காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் குன்னம் சட்டசபை தேர்தலில் முரசு சின்னத்துக்கு ஓட்டுபோட்ட பொதுமக்கள் மற்றும் தேர்தல் பணியாற்றிய கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, ஆக., 25ம் தேதி தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியேற்றி, ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பது, அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டிட பணியை உடனடியாக துவங்க வேண்டும், வேட்டக்குடி-வயலப்பாடி சாலையை சீர் செய்ய வேண்டும், பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை அதிகமாக சேர்த்தல், குன்னத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும், அரியலூரிலிருந்து பெரியவெண்மணி, புதுவேட்டக்குடி, வேப்பூர், நன்னை, வடக்கலூர் வழியாக லெப்பைக்குடி வரை பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கேப்டன் மன்ற துணை செயலாளர் மலர்மன்னன், மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதுரை, ரெங்கராஜ், பார்த்தீபன், ரவிக்குமார், நல்லமுத்து, வெங்கடாசலம், மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் புனிதராஜ், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக லப்பைக்குடிகாடு பேரூர் செயலாளர் கமால்பாட்ஷா வரவேற்றார்.பேச்சாளர் கருணாநிதி நன்றி


