ADDED : செப் 19, 2011 10:36 PM
கள்ளிமந்தையம் : கள்ளிமந்தையம் அருகே சேவல் சண்டை நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மோதுபட்டி மலைஅடிவாரம் கன்னிமார்கோயில் அருகில் அம்மாபட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு,35, குரும்பலூரைச் சேர்ந்த ராம்குமார், 29, பள்ளிபாளையத்தைச் சேர்ந்த வீரப்பன், 27, மண்டவாடியைச் சேர்ந்த வஞ்சிகுமார், 20 ஆகியோர் பணம் கட்டி சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்தனர். ரோந்து சென்ற கள்ளிமந்தையம் எஸ்.ஐ., முத்துலட்சுமி நால்வரையும் கைது செய்தார்.