ADDED : அக் 13, 2011 10:13 PM
திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்., 17ல், தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் பள்ளிகளுக்கு அன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்., 19 ல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் தேர்தலுக்கு முந்தைய நாளும் விடுமுறை. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு தேர்தல் முதல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, விடுமுறைவிடப்பட்டுள்ளது என, முதன்மை கல்வி அலுவலர் அசோகன் தெரிவித்துள்ளார்.


