Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடும்ப பிரச்னையால்இளம்பெண் தற்கொலை

குடும்ப பிரச்னையால்இளம்பெண் தற்கொலை

குடும்ப பிரச்னையால்இளம்பெண் தற்கொலை

குடும்ப பிரச்னையால்இளம்பெண் தற்கொலை

ADDED : அக் 08, 2011 01:15 AM


Google News
ஆவடி:குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆர்.டி.ஒ., விசாரணை நடத்தி வருகிறார்.ஆவடி அய்யப்பா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் வேல்ராஜ்.

இவரது மனைவி விஜயபிரியா,30. திருமணமாகி, இரண்டு ஆண்டுகளாகின்றன.நேற்று முன்தினம், கணவன், மனைவிக்கு இடையே, குடும்பப் பிரச்னை காரணமாக, வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த விஜயபிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.போலீசார், விஜயபிரியா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான இரண்டு ஆண்டுகளில், விஜயபிரியா தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஒ., விசாரணை நடத்தி வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us