Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ADDED : ஜூலை 21, 2011 05:59 PM


Google News

சென்னை: போச்சம்பள்ளி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை எஸ்.பி., திருநாவுக்கரசு உட்பட, ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு முதன்மை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரை மாநகர், சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த செந்தில்குமார் மாற்றப்பட்டு, கோவை மாநகர் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி., சத்தியப்பிரியா, சேலம் மாநகர் சட்டம்- ஒழுங்கு, துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஏழாவது பட்டாலியன் கமாண்டன்ட்டாக இருந்த திருநாவுக்கரசு, மதுரை மாநகர் சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த, எஸ்.பி., துரைராஜ், சிறப்பு பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி., சம்பத்குமார், கியூ பிரிவு எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us