
'குத்தாட்டம் அப்பறம் ஆரம்பிக்கும்!'
காஞ்சிபுரம் நகர பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
'எல்லாம் கூட்டணி செய்யற வேலை...'
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு நன்றி சொல்ல செல்லும் வழியில், மதுரை வந்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, நிருபர்களை சந்தித்தார்.'மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னை, நெல்லை பேரணியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி, தியாகி இமானுவேல் சேகரன் விழா, நிலத்தடி நீர் காக்க மக்கள் இயக்கம்' என, நீண்ட பேட்டியளித்துக் கொண்டார்.அவரை இடைமறித்த மூத்த நிருபர் ஒருவர், 'அதெல்லாம் இருக்கட்டும் சார்... இன்னிக்கு முக்கியமான பிரச்னையா உள்ள சமச்சீர் கல்வி குறித்து என்ன சொல்றீங்க...' என, கிடுக்கிப்பிடி போட்டார்.'அந்தப் பிரச்னையில, அரசு மேல்முறையீடு செய்து, சுப்ரீம் கோர்ட்ல, உத்தரவு வரப் போகுதே. ஆக்க பொறுத்தாச்சு... ஆற பொறுக்க மாட்டீங்களா...?' என, பழமொழியை உதிர்த்துவிட்டு நழுவினார்.இதைக் கண்ட மற்றொரு நிருபர், 'எல்லாம் கூட்டணி செய்யற வேலை...' என, 'கமென்ட்' அடித்தார்.