/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திருட்டு குடிநீர் இணைப்பில் கவுன்சிலர்களுக்கு தொடர்புதிருட்டு குடிநீர் இணைப்பில் கவுன்சிலர்களுக்கு தொடர்பு
திருட்டு குடிநீர் இணைப்பில் கவுன்சிலர்களுக்கு தொடர்பு
திருட்டு குடிநீர் இணைப்பில் கவுன்சிலர்களுக்கு தொடர்பு
திருட்டு குடிநீர் இணைப்பில் கவுன்சிலர்களுக்கு தொடர்பு
கடலூர் : பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் ஓட்டல் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற வேண்டும் என நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் பேசினார்.
சிவானந்தம் (தி.மு.க.,): மஞ்சக்குப்பத்தில் உள்ள எரிவாயு தகன மேடை எப்போது செயல்படுத்தப்படும். முத்து (சுயே): கடலூர் பஸ் நிலையம் முன்பு கடைகள் இடிக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பூங்கா அமைக்க வேண்டும். பிரகாஷ் (அ.தி.மு.க.,): பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் ஓட்டல் வசந்தபவன் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடையை அகற்றி விட்டு பின்னர் நடைபாதை கடைகளைப் பற்றி பேசலாம்.
பொறியாளர்: இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது. குமார் (அ.தி.மு.க.,): நடப்பது அ.தி.மு.க., ஆட்சி. அதிகாரிகள் யாருக்கும் பயப்பட வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். எந்த குறுக்கீடும் இருக்காது. கோவலன் (தி.மு.க.,): பொறியாளர் இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பற்றி பேசியது தவறு. இது போன்று ஒரு அதிகாரி பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.


