ADDED : செப் 16, 2011 03:45 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, போளிவாக்கம் சத்திரம் கிராமத்தில் உள்ள,
தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை 1,008 தீப காயத்ரி
மகா பூஜை, கோலாகலமாக நடந்தது.குருதேவர் பண்டிட் ஸ்ரீராம்சர்மா ஆச்சாரியா
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த இந்த மகா பூஜைக்கு, கோவில் வளாகத்தில்
யாக சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தன.உலக அமைதிக்காகவும், சமுதாய
மேம்பாட்டிற்காகவும், மழை வேண்டியும் திருவள்ளூர் காயத்ரி பரிவார்
அமைப்பினரால் இந்த பூஜை நடத்தப்பட்டது.
இதில் திருவள்ளூர் மற்றும்
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.