Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோயில் சிலைகள் சேதம்: போலீஸ் விசாரணை

கோயில் சிலைகள் சேதம்: போலீஸ் விசாரணை

கோயில் சிலைகள் சேதம்: போலீஸ் விசாரணை

கோயில் சிலைகள் சேதம்: போலீஸ் விசாரணை

ADDED : செப் 25, 2011 01:28 PM


Google News
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கும்மங்குடியில் உள்ள கருப்பர் கோயில், இங்குள்ள கருப்பர், காளியம்மன், ராக்காயி உள்ளிட்ட 6 சிலைகள் நேற்று இரவு சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது இப்பகுதியில் ஒரு கொலை நடந்துள்ளதால் இதில் தொடர்புடையவர்கள் தான் சிலையை சேதப்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us