ADDED : ஜூலை 15, 2011 01:03 AM
செஞ்சி : செஞ்சி எம்.ஜி.ஆர்., நகர் பகுதியை சேர்ந்தவர் வரதன் (57).
இவர் செஞ்சி நிலஅளவை பிரிவில் சர்வேயராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் அதிக மது அருந்தியதால் செஞ்சி பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.


