தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்
தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்

புதுடில்லி:'தற்கொலை முயற்சி குற்றமல்ல' என்ற வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர, 25 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
சட்ட கமிஷனின் இந்த பரிந்துரை குறித்து, கருத்து தெரிவிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களும், 'தற்கொலை முயற்சியை குற்றமாகக் கருதக்கூடாது' என, கருத்து தெரிவித்துள்ளன.
மனநல பாதுகாப்பு மையத்தை சேர்ந்த தன்னார்வலர், 'தற்கொலை முயற்சி குற்றம் என்ற சட்டத்தை நீக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது' எனக்கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இது குறித்து, விளக்கம் அளிக்கும் படி, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த நிலை குழு உறுப்பினர் ஜட்டன்சிங் என்பவர் குறிப்பிடுகையில், 'சட்ட கமிஷனின் பரிந்துரைக்கு, 25 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும், தற்கொலை முயற்சி குற்றம் என்ற, 309வது பிரிவில் திருத்தம் செய்ய, ஓராண்டுக்கு மேலாகும்' என, தெரிவித்துள்ளார்.