/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி முதலிடம்கோவில்பட்டி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி முதலிடம்
கோவில்பட்டி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி முதலிடம்
கோவில்பட்டி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி முதலிடம்
கோவில்பட்டி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி முதலிடம்
ADDED : செப் 23, 2011 01:04 AM
தூத்துக்குடி : கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி மகளிர் பிரிவில் குழு மற்றும் தடகளப் போட்டிகளில் அதிகப் புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. கோவில்பட்டி கல்வி மாவட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டிகளில் பங்கேற்ற இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஹாக்கி, கால்பந்து மேசைப்பந்து ஒற்றையர் பிரிவுகளில் முதலிடத்தையும், இறகுப்பந்து இரட்டையர், மேசைப்பந்து இரட்டையர் பிரிவுகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மகளிர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஹாக்கி, கால்பந்து, பூப்பந்து, இறகுப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர், மேசைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றனர். மகளிர் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஹாக்கி, கால்பந்து மற்றும் இறகுப்பந்து ஒற்றையர் பிரிவுகளில் முதலிடத்தையும், இறகுப்பந்து இரட்டையர் மற்றும் மேசைப்பந்து இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி போட்டிகளில் முதலிடத்தையும், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். பின்னர் 15, 16ம் தேதிகளில் தடகளப் போட்டிகள் கீழமுடிமன் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டிகளில் 4 வட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் உள்ள 455 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் கலந்து கொண்ட இப்பள்ளி மாணவிகள் மகளிர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவல் 8ம் வகுப்பு மாணவி நித்யா 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும், அதே வகுப்பு மாணவி நவீனா வட்டு எறிதலில் மூன்றாம் இடமும் பெற்றனர். மகளிர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 10ம் வகுப்பு மாணவி பவித்ரா குண்டு எறிதலில் முதலிடமும், வட்டு எறிதலில் இரண்டாம் இடமும் பெற்றனர். மற்றும் அதே பிரிவில் ஸ்வர்ணா, மாலினி ஆகியோர் முறையே குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் மூன்றாம் இடமும் பெற்றனர். இதே பிரிவு மாணவிகள் தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றனர். மகளிர் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 11ம் வகுப்பு மாணவி மலையரசி 400 மீ ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், பிளஸ் 2 காயத்ரி குண்டு எறிதலில் இரண்டாம் இடமும் பெற்றனர். அதே பிரிவு மாணவிகள் தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றனர்.
மாணவர்கள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 8ம் வகுப்பு மாணவர் அஜீத்குமார் உயரம் தாண்டுதலில் முதலிடமும், அதே வகுப்பு மாணவர் நந்தகோபாலன் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும் பெற்றனர். மாணவர்கள் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 10ம் வகுப்பு மாணவர்கள் குரு நாகார்ஜூன் உயரம் தாண்டுதலில் முதலிடத்தையும், தடைதாண்டும் ஓட்டத்தில் அதே வகுப்பு மாணவர் மாரியப்பன் இரண்டாம் இடமும் பெற்றனர். குழுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் மா ணவ, மாணவிகளும் தடகளப்போட்டிகளில் முதல் இர ண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளும் திருநெல்வேலியில் வைத்து நடைபெறவிருக்கும் மண்டலப் போட்டிகளில் கலந்து கெ õள்ள தகுதி பெற்றவர்களாவார்கள். மேலும் இக்கல்வியாண்டின் விளையாட்டு போட்டிகளில் இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குழுப் போட்டிகளில் அதிகப் புள்ளிகள் பெற்றமைக்காக, பெஸ்ட் ஸ்கூல் இன் கேம்ஸ்க்கான சுழற்கோப்பையினையும், தடகளம் மற்றும் குழுப் போட்டிகளில் அதிகப் புள்ளிகள் பெற்றமைக்காக பெஸ்ட் ஸ்கூல் இன் ஸ்போர்ட்ஸ் அன்டு கேம்ஸ் சுழற்கோப்பையினையும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சிரோன்மணி சந்திரா வழங்கினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் அருள்மணி, உடற்கல்வி ஆசிரியர்கள் பீட்டர் டைட்டஸ், சித்ரா ஆகியோரையும் பள்ளிச் செயலர் கோவிந்தராஜூலு, தலைமையாசிரியை விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.