/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கட்டுமான நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முறைகேடு வசூல் புகாரால் மூவர் கைதுகட்டுமான நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முறைகேடு வசூல் புகாரால் மூவர் கைது
கட்டுமான நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முறைகேடு வசூல் புகாரால் மூவர் கைது
கட்டுமான நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முறைகேடு வசூல் புகாரால் மூவர் கைது
கட்டுமான நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முறைகேடு வசூல் புகாரால் மூவர் கைது
ADDED : ஆக 19, 2011 11:06 PM
மணப்பாறை: மணப்பாறையில் பள்ளி நிர்வாகத்தை ஏமாற்றி, மாணவர்கள் மூலம்
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துக்காக உறுப்பினர் சேர்க்கை நடத்தி,
முறைகேடாக பணம் வசூலித்த மூவரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம்
மணப்பாறையில் உள்ள தூய ஆந்திரேயா மேல்நிலைப்பள்ளியில் 18, 19 ஆகிய
தேதிகளில், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துக்கான உறுப்பினர் சேர்க்கை
நடப்பதாக, சேலம் லட்சியம் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் மூலம் அறிவிப்பு
வெளியிடப்பட்டது. பள்ளி நிர்வாகமும் இதுதொடர்பான அறிவிப்பு
வெளியிட்டிருந்தது. பள்ளி மாணவர்களிடமும் பெற்றோர்களை உறுப்பினர்
சேர்க்கைக்கு அழைத்து வரச்சொல்லி தலைமை ஆசிரியர் பால் நவரத்தின ராஜன்
அறிவுறுத்தியிருந்தார். அதேபோல், மணப்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளும்
தங்களின் மாணவர்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடப்பது குறித்து
அறிவித்திருந்தனர். அதன்படி, 18, 19 ம் தேதி, தூய ஆந்திரேயா பள்ளியின்
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தது. இதில்,
150க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். உறுப்பினர் சேர்க்கை
ஒவ்வொருவரிடமும் தலா 200 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. உறுப்பினராக
ரேஷன்கார்டு ஜெராக்ஸ், வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ், உறுப்பினர்
விண்ணப்பத்தில் வி.ஏ.ஓ., கையெழுத்து வாங்கி வர கூறியிருந்தனர். நேற்று
உறுப்பினர் சேர்க்கை நடந்து கொண்டிருந்தபோது, மதியம் பள்ளிக்கு வந்த
மாணவர்கள் பெற்றோர் சிலர், உறுப்பினர் சேர்க்கையில் சந்தேகமடைந்து பள்ளி
நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
இதனால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக
சம்மந்தப்பட்ட தொழிலாளர் நலவாரியத்தில் விசாரித்தபோது, உறுப்பினர்
சேர்க்கைக்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியையும், உறுப்பினர் சேர்க்கை நடத்தி
வசூலில் ஈடுபட்ட மூவரையும் முற்றுகையிட்டனர். மணப்பாறை போலீஸார் சம்பவ
இடத்துக்கு வந்தனர். அங்கு, வசூலில் ஈடுபட்ட லட்சியம் அமைப்பு சாரா
தொழிலாளர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் சின்னப்பன் (55), பெரம்பலூர்
மாவட்ட செயலாளர் செல்வக்குமார் (35), உதவியாளர் சீனிவாசன் (35) ஆகிய
மூவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தூய ஆந்திரேயா பள்ளியின்
தலைமை ஆசிரியர் பால் நவரத்தின ராஜன் மற்றும் பெற்றோர், தவறான தகவல்
கொடுத்து, முறைகேடாக வசூல் செய்ததாக மூவர் மீதும் போலீஸில் புகார்
அளித்தனர். புகாரின் பேரில் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.


