ADDED : ஆக 19, 2011 11:09 PM
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சியின் ஒன்றாவது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க கோரி அந்த பகுதி மக்களின் சார்பில் நகர்மன்ற உறுப்பினர் சீத்தாலெட்சுமி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதையேற்று நகராட்சி சார்பில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவில் நகர்மன்ற உறுப்பினர் சீத்தாலெட்சுமி, நகர்மன்ற தலைவர் பிரியா இளங்கோ, முருகன், முத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


