Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/இளம்பெண் சாவில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

இளம்பெண் சாவில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

இளம்பெண் சாவில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

இளம்பெண் சாவில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

ADDED : ஆக 16, 2011 04:10 AM


Google News
நங்கவள்ளி: திருமணமாகி நான்கு ஆண்டுகளில், இறந்த இளம் பெண் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஓமலூர் தாலுகா, தாரமங்கலம் அடுத்த அணைமேடு கிராமத்தை சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் சந்திரன்.

இவரது மனைவி ஜெயகொடி (24). தம்பதியருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை.ஜெயகொடியின் பெற்றோர் வீடு முத்துநாயக்கன்பட்டி அருகிலுள்ள கச்சுவல்லியான் தெருவில் உள்ளது. நேற்று காலை, ஜெயகொடி தந்தை பரமசிவத்திடம், 'உங்கள் மகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை கொண்டார்' என சந்திரன் உறவினர்கள் கூறியுள்ளார்.பரமசிவமும், அவரது உறவினர்களும் அணைமேடு கிராமத்துக்கு சென்று, ஜெயகொடியின் உடலை பார்த்தனர். அப்போது, அவரது தலையில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கணவன் வீட்டார் அடித்துக் கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டினர்.ஜெயகொடி மரணத்துக்கு காரணமான கணவர் சந்திரனையும், அவரது பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் எனக்கோரி, 200க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 3 மணி அளவில் அணைமேடு அருகே, தாரமங்கலம்-சேலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாரமங்கலம் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.மேட்டூர் ஆர்.டி.ஓ., சூர்யபிரகாஷ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். சந்திரன் வீட்டை பார்வையிட்டபோது, அங்கு ரத்தகரை படிந்த துணிகள் வீட்டில் கிடந்தது. வீட்டின் பின்புறம் ரத்தக்கரை படிந்த துணிகள் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின், நடவடிக்கை எடுக்கப்படும், என ஆர்.டி.ஓ., உறுதியளித்தார்.அதை தொடர்ந்து, ஜெயகொடி உடல் பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயகொடியின் கணவன் சந்திரன், பெற்றோருடன் தாரமங்கலம் போலீஸில் சரணைந்தார். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us