/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பைக் மீது பஸ் மோதி விபத்து குழந்தையுடன் தொழிலாளி பலிபைக் மீது பஸ் மோதி விபத்து குழந்தையுடன் தொழிலாளி பலி
பைக் மீது பஸ் மோதி விபத்து குழந்தையுடன் தொழிலாளி பலி
பைக் மீது பஸ் மோதி விபத்து குழந்தையுடன் தொழிலாளி பலி
பைக் மீது பஸ் மோதி விபத்து குழந்தையுடன் தொழிலாளி பலி
ADDED : செப் 17, 2011 12:53 AM
சிதம்பரம் : சிதம்பரம் புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டடத் தொழிலாளி தனது ஒன்னரை வயது குழந்தையுடன் உடல் நசுங்கி இறந்தார்.
மனைவி படுகாயமடைந்தார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த குறுங்குடியைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன், 38; கட்டடத் தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி லட்சுமி, 25, ஒன்னரை வயது மகன் கணேஷ் ஆகியோருடன் கடலூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குமோட்டார் சைக்கிளில் சென்று மாலை வீடு திரும்பினார்.பொல்லாப்பிள்ளை சாவடி அருகே புறவழிச்சாலையை கடக்க முயன்ற போது கும்பகோணத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த தனியார் பஸ் கொளஞ்சிநாதன் மீது மோதியது.இவ்விபத்தில் கொளஞ்சிநாதன், அவரது மகன் கணேஷ் இருவரும் உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தனர். படுகாயமடைந்த லட்சுமி சிதம்பரம் தனியார் மருத்துவமனையில்÷÷ர்க்கப்பட்டார்.சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து வி÷õரித்து வருகின்றனர்.