Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் சாலைகளில் கண்காணிப்பு கேமராபூமி பூஜையுடன் நேற்று பணி துவங்கியது

கடலூர் சாலைகளில் கண்காணிப்பு கேமராபூமி பூஜையுடன் நேற்று பணி துவங்கியது

கடலூர் சாலைகளில் கண்காணிப்பு கேமராபூமி பூஜையுடன் நேற்று பணி துவங்கியது

கடலூர் சாலைகளில் கண்காணிப்பு கேமராபூமி பூஜையுடன் நேற்று பணி துவங்கியது

ADDED : செப் 21, 2011 11:07 PM


Google News
கடலூர்:கடலூரில் பிரதான சாலைகளில் 25 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி நடைபெறும் குற்றச் செயலில் ஈடுபடுவோரை கண்டறியும் பொருட்டு நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீஸ் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்கு சேலத்தைச் சேர்ந்த எலிம் நிறுவனம் மூலம் முதல் கட்டமாக 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பாரதி ரோடு ரவுண்டானா, பாரதி ரோடு நான்கு முனை சந்திப்பு, அண்ணா பாலம் சிக்னல், லாரன்ஸ் ரோடு, வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு மற்றும் பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் நான்கு சுழலும் கேமரா, 18 கண்காணிப்பு கேமராவும், 28 ஒலி பெருக்கி கருவிகள் பொருத்தப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நேற்று காலை 9 மணிக்கு கடலூர் அண்ணா பாலம் சிக்னல் அருகே நடந்தது. எஸ்.பி., பகலவன் பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சேலம் எலிம் நிறுவனத்தைச் சேர்ந்த பாஸ்கரன், சதீஷ், ஸ்ரீகாந்த், பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர்.கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை ஒரு மாதத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us