Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வி.ஏ.ஒ., உட்பட 4 பேர் மீது வழக்கு பட்டா மாற்றியவர் கைது

வி.ஏ.ஒ., உட்பட 4 பேர் மீது வழக்கு பட்டா மாற்றியவர் கைது

வி.ஏ.ஒ., உட்பட 4 பேர் மீது வழக்கு பட்டா மாற்றியவர் கைது

வி.ஏ.ஒ., உட்பட 4 பேர் மீது வழக்கு பட்டா மாற்றியவர் கைது

ADDED : ஜூலை 14, 2011 11:44 PM


Google News

மானாமதுரை : திருப்பாச்சேத்தி அருகே கீழச்சொரிக்குளம் பிச்சை என்பவரின் ஒரு ஏக்கர் 12 சென்ட் புன்செய் நிலத்தை, வேலாங்குளம் கருப்பணன் (75) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து, பறையங்குளம் பெரியகருப்பன் மகன் அர்ச்சுணன் (48) என்பவருக்கு விற்றுள்ளார்.

நிலத்தை வாங்கிய அர்ச்சுணன், மதுரை சீனிவாசன் என்பவருக்கு விற்றுள்ளார். தனது நிலம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பிச்சை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.



இதுகுறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக வருவாய்த்துறை பட்டாவை ரத்து செய்து,பிச்சைக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.பழையனூர் போலீசார் கருப்பணன், அர்ச்சுணன், தலையாரி மலைச்சாமி, வி.ஏ.ஒ., விஸ்வநாதன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து, அர்ச்சுணனை கைது செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us