/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பஸ் இன்றி 3 கி.மீ., நடைபயணம் : குமுறும் பால்கரை கிராம மக்கள்பஸ் இன்றி 3 கி.மீ., நடைபயணம் : குமுறும் பால்கரை கிராம மக்கள்
பஸ் இன்றி 3 கி.மீ., நடைபயணம் : குமுறும் பால்கரை கிராம மக்கள்
பஸ் இன்றி 3 கி.மீ., நடைபயணம் : குமுறும் பால்கரை கிராம மக்கள்
பஸ் இன்றி 3 கி.மீ., நடைபயணம் : குமுறும் பால்கரை கிராம மக்கள்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆர்.எஸ்.
இது குறித்து இப்பகுதியினரின் குமுறல்: ரஞ்சிதா, மாணவி, பால்கரை : ரோடு வசதி இல்லாததால் பஸ்கள் ஊருக்குள் வருவதில்லை. கீழக்கரை ரோட்டில் உள்ள ஆர்.எஸ்.மடை பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து செல்கிறோம்.எங்கள் பகுதிக்கு பஸ் விடவேண்டும். தங்கவேல்: தார்ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும், ஒப்பந்ததாரர் இதுவரை ரோடு அமைக்கவில்லை. ராமநாதபுரத்திற்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் பெண்கள் வெயிலில் நடந்து வர சிரமப்படுகின்றனர். இரவில் தெருக்கள் இருளில் மூழ்கி இருக்கும். கலெக்டர் வருவதையொட்டி சி.எப்.எல்., பல்புகள் போட்டுள்ளனர். ஊராட்சி தலைவரிடம் கேட்டால், பதில் சொல்வதில்லை.
பூச்சரன் : காவிரி குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. மேல்நிலை தொட்டியில், அரை தொட்டி மட்டுமே தண்ணீர் ஏற்றப்படுகிறது. அது இங்குள்ள மக்களுக்கு போதவில்லை. மணல் கலந்த தண்ணீரைத்தான் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். தெரு குழாய்களில் தண்ணீர் வராததால், அவற்றை முட்களை வைத்து பாதுகாத்து வருகிறோம். கவுசல்யா : தார் ரோடு அமைத்து விரைவில் பஸ் விட வேண்டும். அந்த பஸ்களையும் மாணவர்களின் நலன் கருதி காலை 7.30, மாலை 5.30 மணிக்கு இயக்க வேண்டும். போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.