/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வடகிழக்கு மழை பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவுவடகிழக்கு மழை பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
வடகிழக்கு மழை பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
வடகிழக்கு மழை பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
வடகிழக்கு மழை பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை களைய தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணை, குளம், குட்டை நிரம்பும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னதாகவே திட்டமிட வேண்டும். மழை துவங்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சிறப்பாக செய்தால், சேதத்தை தவிர்க்கலாம். தேவையான அளவு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், கால்வாய் மற்றும் நீர் நிலைகளில் ஏற்படும் உடைப்பை சரி செய்ய முடியும்.
ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மழைமானியை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். சாலைகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் நீக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேவையான மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேவையான உணவுப்பொருள் இருப்பு வைக்க வேண்டும். சாக்கடை நீர் தேங்கிவிடாமல், உடனுக்குடன் அகற்ற வேண்டும். கொசு உற்பத்தியாகாமல் மருந்து தெளித்து தடுக்க வேண்டும். மக்களுக்கு நோய் பரவாமல் இருக்க தேவையான மருந்துகளை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்க வேண்டும். மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவை எனில் தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.