/உள்ளூர் செய்திகள்/சேலம்/ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட முடிவுராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட முடிவு
ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட முடிவு
ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட முடிவு
ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட முடிவு
சேலம்: சேலம் மாநகராட்சியில் கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலில், மாஜி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆதரவாளர்கள் யாரும் இடம் பெறவில்லை.
நேர்காணலின் போது கொடுக்கப்பட்ட பட்டியல், அதன்பின் மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ராஜேந்திரன் சார்பில், 14 பேர் கொண்ட பட்டியல் கொடுக்கப்பட்டது. அதில், சுபாஷுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆதரவாளர்களான, துணை மேயர் பன்னீர்செல்வம், மண்டல தலைவர்கள் நடேசன், மோகன், வெங்கடேசன், குட்டி என்ற தமிழரசன், கே.எஸ்.பழனிசாமி, தளபதி நற்பணி மன்ற பொறுப்பாளர் வக்கீல் மயில்வேலு, அவருடைய மனைவி உள்ளிட்டோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் விசுவாசிகள், மூத்த மகன் ராஜா, இளைய மகன் பிரபு, பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய அழகாபுரம் முரளி மனைவி புவனேஸ்வரிக்கு, 4வது வார்டிலும், பா.ம.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்த விஷ்ணுபார்த்திபனுக்கு 6வது வார்டிலும், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அருணாசுந்தருக்கு, 7வது வார்டிலும், நிலத்தை மிரட்டி வாங்கிய வழக்கில் கைதான ஆட்டோ மாணிக்கத்துக்கு, 9வது வார்டிலும், வக்கீல் தெய்வலிங்கத்துக்கு 10வது வார்டிலும், 26வது வார்டை பொறுத்தமட்டில், கலையமுதன் மருமகள் சொர்ணலதாவுக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.