/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/குடிநீர் தட்டுப்பாட்டால் சிவகங்கையில் மக்கள் தவிப்புகுடிநீர் தட்டுப்பாட்டால் சிவகங்கையில் மக்கள் தவிப்பு
குடிநீர் தட்டுப்பாட்டால் சிவகங்கையில் மக்கள் தவிப்பு
குடிநீர் தட்டுப்பாட்டால் சிவகங்கையில் மக்கள் தவிப்பு
குடிநீர் தட்டுப்பாட்டால் சிவகங்கையில் மக்கள் தவிப்பு
ADDED : செப் 20, 2011 11:01 PM
சிவகங்கை:சிவகங்கையில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யாததால் மக்கள்
நான்கு நாட்களாக தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.திருச்சி முக்கொம்பில்
இருந்து காளையார்கோயில் வழியாக சிவகங்கை நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு
வரப்படுகிறது. திருச்சி பம்பிங் ஸ்டேசனில் ஏற்பட்ட பழுதால் சிவகங்கைக்கு
கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் சிவகங்கையில் உள்ள 27 வார்டு
மக்களும் கடந்த நான்கு நாட்களாக தண்ணீரை தேடி குடங்களுடன் அலைகின்றனர்.
7 வது வார்டைச் சேர்ந்த குமரன் கூறுகையில்,'' சிவகங்கை நகராட்சி
பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் வரவில்லை. புகார் தெரிவித்தும்
நடவடிக்கை இல்லை, '' என்றார்.நகராட்சி கமிஷனர் சுப்பிரமணி கூறுகையில்,
''திருச்சியில் பம்பிங் ஸ்டேசனில் வால்வு ரிப்பேர் ஆனதால் தண்ணீர்
வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்டு தண்ணீர்
வினியோகிக்கப்படும்'' என்றார்.


