Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பசுமை எரிசக்தி இயக்க பேரணி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

பசுமை எரிசக்தி இயக்க பேரணி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

பசுமை எரிசக்தி இயக்க பேரணி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

பசுமை எரிசக்தி இயக்க பேரணி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

ADDED : ஆக 21, 2011 02:37 AM


Google News

நாமக்கல்: முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், நாமக்கல் பவுல்டரி ரோட்டரி டவுன் சங்கம் மற்றும் இன்னர்வீல் சங்கம் சார்பில், பசுமை எரிசக்தி இயக்க பேரணி நடந்தது.

மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்துப் பேசினார். நாமக்கல் கூட்டுறவு விற்பனைச் சங்கம் அருகே துவங்கிய பேரணி, பலப்பட்டரை மாரியம்மன் கோவில், கடைவீதி, பயணியர் மாளிகை, மோகனூர் சாலை வழியாக தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.



பேரணியில், மின்சார சிக்கனம், மரம் வளர்த்தல், புதுப்பிக்கவல்ல எரிசக்தியை பயன்படுத்துவது, சூரிய சக்தியை பயன்படுத்துவது உள்ளிட்ட வாசகம் அடங்கிய விழிப்புணர்வு அட்டைகளை ஏந்திச் சென்றனர். செல்வம் கலைக் கல்லூரி, சுப்பிரமணியம் கலைக் கல்லூரி, கிங் கல்லூரி, அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., பாஸ்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் குமார், நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ்குமார், ரோட்டரி உதவி ஆளுநர் கணபதி, இன்னர்வீல் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us