ADDED : ஆக 21, 2011 02:06 AM
தர்மபுரி: முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் லில்லி தலைமையில் நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
'நான் ஜாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் பாடுபடுவேன்' என கலெக்டர் லில்லி உறுதி மொழி வாசிக்க கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்தனர்.