ADDED : ஆக 09, 2011 01:19 AM
பழநி : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலை, சிறப்பு நிலையாக தரம் உயர்த்த, அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
சங்க மாநாடு பழநியில் நடந்தது. கிளை தலைவர் விலங்கு தலைமை வகித்தார். துணை தலைவர் சின்னச்சாமி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். செயலாளர் மங்களபாண்டியன் அறிக்கை வாசித்தார். கோயில் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்; சத்தணவு, அங்கன்வாடி ஊழியர், மக்கள் நலப்பணியாளருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் கருணாநிதி, வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவர் ராஜசேகர், சாலைப்பணியாளர் சங்க தலைவர் ஜெயபால் பங்கேற்றனர்.


