சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பட்டியலே மூச்சு முட்டுகிறது: கருணாநிதி
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பட்டியலே மூச்சு முட்டுகிறது: கருணாநிதி
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பட்டியலே மூச்சு முட்டுகிறது: கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ளஅறிக்கை: 'தி.மு.க., ஆட்சியில், காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.
அதற்குள், இளம்பெண்கள், மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு, வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை, கொலை, தற்கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, கோஷ்டி மோதல், கஞ்சா பறிமுதல், தி.மு.க., பிரமுகர்கள் படுகொலை, வாகன கடத்தல், அ.தி.மு.க., பிரமுகர் போலீசுடன் மோதல், விசாரணை கைதி மர்ம சாவு, கைதி தப்பியோட்டம், குழந்தை கடத்தல், மாணவி கடத்தல், பட்டதாரி பெண் எரித்து கொலை, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி, வெளிமாநிலங்களிலிருந்து மதுபானம் கடத்தல், போலீஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு என, கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு நிகழ்வுகள் பற்றி நாளிதழ்களில் வரும் செய்திகளை பட்டியலிடவே மூச்சு முட்டுகிறது.
தி.மு.க., ஆட்சியை குறை கூறி அன்றாடம் அறிக்கை விட்ட ஜெயலலிதா, தமது ஆட்சியில் நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்? போலீசை கேட்டால், 'அ.தி.மு.க., ஆட்சியினர் அறிவுரைப்படி, தி.மு.க., வினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதற்கே நேரம் போதவில்லை' என்பர். பொய் வழக்கு போடும் ஜெயலலிதா, இந்த உண்மை சம்பவங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.