/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசை நிகும்பலா யாகம்பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசை நிகும்பலா யாகம்
பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசை நிகும்பலா யாகம்
பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசை நிகும்பலா யாகம்
பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED : ஆக 01, 2011 01:30 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது.பாதூர் வலமுறை அகத்தீஸ்வர சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு ஆடிஅமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு துவங்கிய யாகத்தில் சங்கல்பம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 11.45 மணிக்கு யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்ப்பிக்கப்பட்டது. பின்னர் நெய், பழ வகைகள், பால் யாககுண்டத்தில் சேர்ப்பித்தனர். பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலை மையில் ஐந்து குருக்கள் யாகத்தை நடத்தினர்.