/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனியார் பள்ளிகளில் கட்டணம்: சட்டசபையில் காரசார விவாதம்தனியார் பள்ளிகளில் கட்டணம்: சட்டசபையில் காரசார விவாதம்
தனியார் பள்ளிகளில் கட்டணம்: சட்டசபையில் காரசார விவாதம்
தனியார் பள்ளிகளில் கட்டணம்: சட்டசபையில் காரசார விவாதம்
தனியார் பள்ளிகளில் கட்டணம்: சட்டசபையில் காரசார விவாதம்
புதுச்சேரி : தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்தவிவாதம்:அன்பழகன்: புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன...அமைச்சர் கல்யாணசுந்தரம்: தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிக்கேற்ப கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முதல்வர் ரங்கசாமி: பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் ஏன் சேர்க்கக் கூடாது... நல்ல கட்டடத்தில் அரசு பள்ளிகள் இயங்குகின்றன. நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். தனியார் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டுமா... ஒரே பள்ளியில் சேர வேண்டும் என அனைவரும் செல்வதால் அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். கல்வி கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்தை அரசு பரிசீலிக்கும். லட்சுமிநாராயணன்: அரசு பள்ளிகளின் தரம் என்ன, என்னன்ன பிரச்னைகள் உள்ளது என பாருங்கள். பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை உள்ளது.முதல்வர் ரங்கசாமி: அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கின்றனர். முதலிடம் பிடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் அப்பா டாக்டரா, அம்மா தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறாரா என பார்த்து சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.லட்சுமிநாராயணன்: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் முதல்வர் பேசுவதற்கு அவசியம் இல்லை.அன்பழகன்: கட்டணம் நிர்ணயம் தொடர்பாக சட்டம் கொண்டு வாருங்கள்.முதல்வர் ரங்கசாமி: இதுதொடர்பாக குழு அமைக்கப்படும்.