ADDED : ஆக 19, 2011 10:43 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியில் இடியுடன்
கூடிய பலத்த மழை பெய்தது.
அந்த ஊரை சேர்ந்த பெருமாள் (42) க்கு சொந்தமான 20
ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது. மின்னல் தாக்கியதில் 5 ஆடுகள்
பலியாயின. மேலும், 15 ஆடுகள் காயமடைந்தன. தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார்
மற்றும் வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.