/உள்ளூர் செய்திகள்/தேனி/தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?
தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?
தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?
தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?
தேவாரம் : தேவாரத்தில் குண்டு வெடித்ததில், பெண் உட்பட இரண்டு பேர் உடல் சிதறி இறந்தனர்.
ராக்கெட் லாஞ்சர்?: சம்பவ இடத்தை பார்வையிட்ட ஏ.டி.எஸ்.பி., செல்வராஜ் கூறுகையில்,'விசாரணைக்கு பின் வெடித்தது எந்தவகை குண்டு என்பது தெரிய வரும்,'என்றார். அதேசமயம் வெடித்த குண்டின் வீரியத்தை பார்க்கும் போது, டெட்டனேட்டர் செருகிய ஜெலட்டின் பண்டல் அல்லது ராக்கெட் லாஞ்சராக இருக்க வேண்டும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கியூபிரிவு: பவுன்தாய் உடலிலிருந்து வெடிகுண்டின் துகள்களை தடயவியல் நிபுணர் ஜெயபிரகாஷ் சேகரித்தார். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
லாஞ்சர்?: குண்டு வெடிப்பை பார்த்த முத்துமாரி(35) போலீசாரிடம் கூறுகையில்,''மளிகை சாமான் வாங்க குணசேகரன் வீட்டை கடந்து சென்றேன். அவர் 2 அடி உயரமுள்ள வெள்ளைநிற உருளையை வைத்திருந்தார். அங்கிருந்து 25 அடி தூரம் சென்றபோது பலத்த வெடிச்சத்தம் கேட்டது. பவுன்தாய் ரத்த வெள்ளத்தில் சாக்கடையில் கிடந்தார். குணசேகரனின் உடல் அப்பகுதி முழுவதும் சிதறி கிடந்தது. எனது கை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது,' என்றார்.
நக்சல்?: தமிழகம் மற்றும் ஆந்திர மாநில போலீசாரால் தேடப்படும் மாவோயிஸ்ட் நக்சல் தலைவர் மகாலிங்கம்(50), ஜாமினில் வந்து தேவாரம் மேட்டுப்பட்டியில் தங்கியிருந்த போது(கடந்த ஆண்டு) தலைமறைவானார். இவரது ஆதரவாளர்கள் நாச வேலைக்கு பயன்படுத்த கொண்டு வந்த ராக்கெட் லாஞ்சரை, யாராவது எடுத்து பழைய இரும்பிற்கு விற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.