Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாலையில் அழுது தவித்த சிறுமிபோலீஸ் நிலையத்தில் விசாரணை

சாலையில் அழுது தவித்த சிறுமிபோலீஸ் நிலையத்தில் விசாரணை

சாலையில் அழுது தவித்த சிறுமிபோலீஸ் நிலையத்தில் விசாரணை

சாலையில் அழுது தவித்த சிறுமிபோலீஸ் நிலையத்தில் விசாரணை

ADDED : செப் 16, 2011 03:13 AM


Google News
சிதம்பரம்:சிதம்பரம் மந்தக்கரை சாலையில் அழுது தவித்த சிறுமியை போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.சிதம்பரம் மந்தக்கரை பஸ் நிலையம் அருகே 5 வயது மதிக்கத்தக்க சிறுமி 2 மணி நேரமாக அழுதுகொண்டிருந்தார்.

தகவல் அறிந்த தனிப்பரிவு போலீஸ் தமிழ்வாணன் உடன் சென்று அழுதுகொண்டிருந்த சிறுமியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தார். சிறுமியை விசாரணை செய்தபோது சிறுமியின் பெயர் மஞ்சு எனவும், தந்தையின் பெயர் திருஞானமூர்த்தி எனவும் அழுதுகொண்டே கூறினார். அதைத் தவிர வேறு எந்த தகவலும் சிறுமிக்கு சொல்ல தெரியவில்லை. இருப்பினும் சிறுமி அழுதுகொண்டே இருந்தாள்.சரியான முகவரி தெரியாததால் குழந்தையின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us