Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஏலம் போகாத கடைகளால் ஓசூர் நகராட்சிக்கு நஷ்டம்

ஏலம் போகாத கடைகளால் ஓசூர் நகராட்சிக்கு நஷ்டம்

ஏலம் போகாத கடைகளால் ஓசூர் நகராட்சிக்கு நஷ்டம்

ஏலம் போகாத கடைகளால் ஓசூர் நகராட்சிக்கு நஷ்டம்

ADDED : செப் 20, 2011 12:55 AM


Google News

ஓசூர் : ஓசூரில் ,11 கோடி ரூபாய் செலவில் ஹைடெக் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, இரு ஆண்டுகளாகியும், பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் மேல்தளத்தில் உள்ள 23 கடைகளை வாடகைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை.

வாடகைக்கு எடுத்த கடைகளில் வியாபாரமில்லாததால், கடைகளை நகராட்சியிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

ஓசூர் நகராட்சி அலுவலகம் அருகே பெங்களூரு சாலையில், 11 கோடி ரூபாயில் நவீன ஹைடெக் பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இந்த பஸ்ஸ்டாண்ட்டில், நகராட்சிக்கு நிரந்தர வருமானம் கிடைக்க கூடிய வகையில், இரு அடுக்கு கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தில், 76 கடைகள், இரு ஹோட்டல்கள் கட்டப்பட்டன. தமிழகத்தில் இருந்து பெங்களூரு, மைசூர் மற்றும் வடமாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் ஓசூர் பஸ்ஸ்டாண்ட் வந்து செல்வதால், ஓசூர் பஸ்ஸ்டாண்ட்டில், 24 மணி நேரமும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.



அதனால், பஸ்ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுப்பதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி காணப்பட்டது. கீழ் தளத்தில் உள்ள அனைத்து கடைகளும் கூடுதல் தொகைக்கு ஏலம் போனது. கீழ் தள கடைகள் அதிகபட்சம் 35,500 ரூபாய் வரை ஏலம் போனது. அதேநேரத்தில், மேல் தளத்தில் உள்ள வணிக வளாக கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஓசூர் பஸ்ஸ்டாண்ட்டுக்கு வெளியூர் பயணிகள்தான் அதிகம் வந்து செல்கின்றனர். அவர்களை நம்பிதான் பஸ்ஸ்டாண்ட் கடைகளில் வியபாõரம் நடக்கிறது. கீழ் தள கடைகளில், அவர்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். மேல் தள கடைகளுக்கு செல்வதற்கு பயணிகள் ஆர்வம் காட்டுவதில்லை.



அதனால், மேல் தள கடைகளில் முற்றிலும் வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை. அங்கு டிக்கெட் புக்கிங் வாடிக்கையாளர்கள் விரும்பி வரக்கூடிய நிர்வாக ரீதியான அலுவலங்கள் மட்டுமே செயல்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கூடுதல் வாடகைக்கு கடைகளை ஏலம் எடுக்காமல், வியாபாரிகள் புறக்கணித்து வருகின்றனர். மேல்தளத்தில் உள்ள, 45 கடைகளில் 23 கடைகள் ஏலம் போகவில்லை. எடுத்த கடைகளிலும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாமல், வியாபாரிகள் அவற்றை நகராட்சியிடம் திருப்பி ஒப்படைத்து வருகின்றனர். இதனால், பல கோடி ரூபாய் செலவில் பஸ்ஸ்டாண்ட் கட்டி இரு ஆண்டாகியும் மேல் அடுக்கு வணிகளாக கடைகள் வாடகைக்கு எடுக்கப்படாததால், நகராட்சிக்கு நிரந்தர வருமானம் இழப்பு ஏற்பட்டு வருகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us