ADDED : ஜூலை 26, 2011 12:46 AM
மதுரை : ஜவுளித் துறை சார்பில், ஈரோட்டில் ஒருமாத விசைத்தறி பயிற்சி அளிக்கப்படுகிறது.
விசைத்தறி நெய்தலும், பராமரிப்பும் பயிற்சியின் கீழ், டாபி, லூம், ஜக்கார்டு, டெரி, லட்சுமி ரூட்டி 'சி' தானியங்கி, சுல்சர் புரஜக்டர் தறிகளில் சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. ஆக., 1ல் துவங்கும் பயிற்சியில் சேர விரும்பும் 18 வயது நிரம்பியவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஜவுளித்துறை அமைச்சகம், விசைத் தறி சேவை மையம், ஜெகனாதபுரம் காலனி, சூரம்பட்டி, ஈரோடு. இத்தகவலை மைய உதவி இயக்குனர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.