ADDED : ஜூலை 14, 2011 12:43 AM
நாசரேத் : நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரி சார்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உதவியுடன் நாசரேத் கஸ்பா பள்ளி, மதுரம் பள்ளி, தேமான்குளம், பால்குளம் ஆகிய இடங்களில் ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.
ஆழ்வார்திருநகரி ஒன்றிய உதவிதொடக்கக்கல்வி அலுவலர் தாசன் பொன்ராஜ் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். சமுதாயக் கல்லூரி இயக்குநர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். முகாமில் 261 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.


