Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அரசு பஸ்-மணல் லாரி மோதி ஆறு பேர் காயம்

அரசு பஸ்-மணல் லாரி மோதி ஆறு பேர் காயம்

அரசு பஸ்-மணல் லாரி மோதி ஆறு பேர் காயம்

அரசு பஸ்-மணல் லாரி மோதி ஆறு பேர் காயம்

ADDED : அக் 08, 2011 01:26 AM


Google News
மோகனூர்: வளையப்பட்டி அருகே அரசு பஸ் மீது மணல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஆறு பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக, மோகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி, அரசு பஸ் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சென்று கொண்டிருந்தது. வளையப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி, மணல் லோடு ஏற்றி வந்த லாரி, எதிர்பாராத விதமாக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர் பாண்டியன் (25), மோகனூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, மணல் லாரி டிரைவர் நந்தகுமாரை (37) கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us