தமிழக தறிகளிடமிருந்தே வேட்டி, சேலை வாங்கப்படும்
தமிழக தறிகளிடமிருந்தே வேட்டி, சேலை வாங்கப்படும்
தமிழக தறிகளிடமிருந்தே வேட்டி, சேலை வாங்கப்படும்
சென்னை : 'தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்கு அரசு மூலம் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு, தமிழகத் தறிகளிலிருந்து மட்டுமே வேட்டி, சேலைகள் வாங்கப்படும்.
தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்குத் தேவையான, மொத்த வேட்டி, சேலைகளை கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்து வழங்க முடியாத நிலையில், தேவையான வேட்டி, சேலைகளை வெளி மாநிலங்களிலிருந்து, கோ - ஆப்டெக்ஸ் மூலம் வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியது.
இது குறித்து, கோ - ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உமாசங்கர் கூறியதாவது:தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்தில், வரும் 2012ம் ஆண்டு பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கோடியே 70 லட்சம் வேட்டிகள், 1 கோடியே 70 லட்சம் சேலைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு, கைத்தறி, பெடல் மற்றும் விசைத் தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் உருவாக்கப்படும் மொத்த வேட்டி, சேலைகளும் வாங்கிக் கொள்ளப்பட்ட பிறகு, மீதம் தேவைப்படும் வேட்டி, சேலைகளை பிற மாநில தறிகளிலிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்குவதைவிட, நேரடியாக பொது ஏல ஒப்பந்தம் மூலம் வாங்கினால், செலவு குறைய வாய்ப்புள்ளது.இது குறித்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், தமிழகத்தில் உள்ள தறிகளிலிருந்தே வேட்டி, சேலைகள் வாங்கப்பட உள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகப் பேசப்படுவது தவறான தகவல்.இவ்வாறு, உமாசங்கர் கூறினார்.