ADDED : ஜூலை 11, 2011 03:02 AM
கரூர்: கரூர் சி.ஐ.ஐ., சார்பில் தொலைதொடர்பு துறையில் பெண்கள் தொழில்
முனைவோருக்கான ஆலோசனை கூட்டம் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் நடந்தது.
சி.ஐ.ஐ., தலைவர் சுசீந்திரன் வரவேற்றார்.கூட்டத்தில் தொலைதொடர்பு துறையில்
தொழில் வாய்ப்புகள் குறித்து சென்னை குவாலிட்டி மற்றும் அஸ்ஸூரன்ஸ்
ஸ்டீரியா இந்தியா லிமிடெட் நிறுவன அதிகாரி விஜயலட்சுமி, நிதி ஆதாரம்
மற்றும் மான்ய திட்டங்கள் குறித்து கரூர் முன்னோடி வங்கி மேலாளர்
சந்திசேகரன் ஆகியோர் பேசினர்.
சி.ஐ.ஐ., துணை தலைவர் ராஜசேகரன் உள்பட ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.