காஞ்சிபுரம் அருகே பிராந்தி குடித்த இருவர் பலி:விஷம் கலப்பா என போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம் அருகே பிராந்தி குடித்த இருவர் பலி:விஷம் கலப்பா என போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம் அருகே பிராந்தி குடித்த இருவர் பலி:விஷம் கலப்பா என போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, பிராந்தி குடித்த இருவர் பரிதாபமாக இறந்தனர்.
வழக்கம்போல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாங்கி வந்த மதுவில் சிறிது அருந்தினார். சிறிதுநேரத்தில், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அப்போது, அவரது உறவினர் பாரதி அங்கு வந்தார். ஏகாம்பரம் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு, அவர் மீதி வைத்திருந்த மதுபானத்தை, எடுத்துக் கொண்டு வெளியேறினார். பின் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பூபாலன், 45, என்பவரை அழைத்துக் கொண்டு மது அருந்த சென்றார்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஏகாம்பரத்தை சோதித்தபோது, அவர் இறந்திருந்தார். எனவே, அவர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது, அங்கு வந்த பூபாலனுக்கும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை சிகிச்சைக்காக, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை 5 மணிக்கு இறந்தார்.ஏகாம்பரம் குடித்த மதுவில் யாராவது விஷம் கலந்தனரா? அல்லது அவரே தற்கொலை செய்து கொள்ள, மதுவில் விஷம் கலந்து குடித்தாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டீன் பிரேம்ராஜ் விசாரித்து வருகிறார்.